ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

அச்சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு அரசு நிகழ்ச்சிக்காக சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் செங்கல்பட்டு மாவட்டம்,அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்..இந்த ஆய்வின்போது,மருத்துவரிடம் போதிய மருத்துவ உபகரணங்கள் உள்ளதா எனவும்,பொதுமக்களிடம் சரியான நேரத்தில் மருத்துவர்கள் வருகிறார்களா எனவும், மருத்துவர்கள் எவ்வாறு சிகிச்சை அளிக்கிறார்கள் என்பது குறித்து பொது மக்களிடம் கேட்டறிந்தார், மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள் செவிலியர்கள் திமுக நிர்வாகிகள் பல உடன் இருந்தனர்.

Tags

Next Story