குமரியில் சிறப்பு அலுவலருடன் அமைச்சர் ஆய்வு

குமரியில் சிறப்பு அலுவலருடன் அமைச்சர் ஆய்வு
மழை சேதம் ஆய்வு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சேத பகுதிகளை பார்வையிட மாவட்ட சிறப்பு அலுவலர் சு.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன், அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். சுசீந்திரம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவியர்கள், தேரூர் பகுதியில் உள்ள வயல்வெளிகளில் திடீர் மழைநீர் புகுந்ததையும் பார்வையிட்டார்.

மேலும் இரவிபுதூர், புதுகட்டளை குளத்தின் அருகில் உள்ள சாலை உடைப்பு , அஞ்சுகிராம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளக்குளம் மற்றும் புன்னார்குளத்தின் உறுதித்தன்மை குறித்து நீர்வளத்துறை பொறியாளர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட பேரிடர் மேலாண்மை கட்டிடத்தில் தங்க வைக்கப்ட்டுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்ததோடு, அங்கு தங்கியிருக்கும் அனைத்து பொதுமக்களுக்கும் மதியஉணவு வழங்கப்பட்டது. இந்த ஆய்வுகளின் போது மாநகராட்சி ஆணையாளர் ஆனந் மோகன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், நாகர்கோவில் வருவாய் கோட்டாசியர் சேதுராமலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story