மிக்ஜாம் புயல் நிவாரண பொருட்களை பார்வையிட்ட அமைச்சர்கள்

திருப்பூரில் மிக்ஜாம் புயல் நிவாரண பொருட்களை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்படும் மிக்ஜாம் புயல் நிவாரண பொருட்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் , ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழிலிசெல்வராஜ் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story