ஊராட்சித் தலைவர்களுக்கு அமைச்சர் உத்தரவு

ஊராட்சித் தலைவர்களுக்கு அமைச்சர் உத்தரவு

அமைச்சர் பெரியசாமி

குடிநீர் பிரச்சனைக்கு முக்கியத்துவம் தர வேண்டுமான ஊராட்சித் தலைவர்களுக்கு அமைச்சர் ஐ பெரியசாமி உத்தரவிட்டார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் கோவிந்தாபுரம் துரைராஜ் நகர் இல்லத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்தித்தார் . அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூர் தொகுதியில் குடிதண்ணீர், சாலைவசதி, தெருவிளக்கு வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ஊராட்சித் தலைவர்கள் தினமும் பொதுமக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்க வேண்டும். அப்போதுதான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் ‌. அவர்கள் பிரச்சினை தீர்ப்பதற்காக தான் நம்மை தேர்வு செய்து உள்ளார்கள் என்பதை அறிய வேண்டும், யாரிடமும் கனிவுடன் கேட்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story