மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு அமைச்சர்கள் வருகை

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு அமைச்சர்கள் வருகை
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு வருகை தந்த அமைச்சர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் நினைவிடத்தில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு ஆதிபராசக்தி அம்மனை வழிபாடு செய்தனர்.

அப்போது ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில்குமார், தலைமை செயல் அதிகாரி வழக்கறிஞர் அகத்தியன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதி, செயல் அலுவலர் மேகவண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story