பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர்கள்

பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர்கள்
பணி நியமன ஆணை வழங்கல் 
பெற்றோரை இழந்த போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பெற்றோரை இழந்த 32 வாரிசுதாரர்களுக்கு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சரும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் கார்த்திகேயன் முன்னிலையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினர். இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story