சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா: மாவட்ட ஆட்சியர் தகவல்

சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா: மாவட்ட ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சித்தலைவர் 

சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா 18 ம் தேதி கொண்டாடப்படுகிறது என ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் மத வழி சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், புத்த மதத்தினர், பாரசிகர்கள், சீக்கியர்கள் மற்றும் ஜெயினர்கள் ஆகியோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் சென்றடையவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தாண்டு சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழாவானது வருகிற 18 அன்று பிற்பகல் 03:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கம் 2 ஆம் தளத்தில் நடைபெறுகிறது என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story