மரம் செடிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு!

மரம் செடிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு!

தீ 

சேத்துப்பட்டு அருகே உள்ள மரம், செடிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பழம்பேட்டை சர்க்கரை பிள்ளையார் கோவில் குளத்தில் உள்ள மரம், செடிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து சேத்துப்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

Tags

Next Story