வல்கனைசிங் கடை வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்

வல்கனைசிங் கடை வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்

தீ வைப்பு 

களியக்காவிளை அருகே வல்கலைசிங் கடை மற்றும் வாகனத்திற்கு தீ வைத்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

படந்தாலுமூடு அருகே மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் தங்க நாடான் மகன் ஜெயன். இவர் படந்தாலுமூட்டில் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். அத்துடன் நடமாடும் பஞ்சர் ஒட்டும் வாகன மும் வைத்துள்ளார். இரவு இவர் தனது பஞ்சர் ஒட்டும் கடையை மூடிவிட்டு நடமாடும் பஞ்சர் ஒட்டும் வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.

இந்நிலையில், நள்ளிரவு 12மணியளவில் இவரது கடை எரிந்து கொண்டு இருப்பதாக செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.ஜெயன் பதறியடித்து கொண்டு, வந்து பார்த்த போது தனது டயர் பஞ்சர் ஒட்டும் வாகனம் எரிந்து கொண்டு இருப் பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடையில் வந்து பார்த்த போது கடையும் தீயில் எரிந்து கொண்டு இருந்தது.இதுகுறித்து ஜெயன் களியக்காவிளை போலீ சில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்ப திவு செய்து, அப்பகுதி யில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story