மண்டபத்தில் தவறவிட்ட நகை மீட்பு: பெண்ணுக்கு டிஎஸ்பி பாராட்டு

மண்டபத்தில் தவறவிட்ட நகை மீட்பு: பெண்ணுக்கு டிஎஸ்பி பாராட்டு

பெண்ணை பாராட்டிய டி எஸ் பி

சாத்தான்குளம் திருமண மண்டபத்தில் தவறவிட்ட நகையை ஒப்படைத்த பெண்ணுக்கு டிஎஸ்பி பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வணிக வைசிய திருமண மண்டபத்தில் கடந்த டிசம்பா் மாதம் 17ஆம் தேதி ஒரு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்ணின் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போய்விட்டது.

மண்டபத்தில் பணிபுரிந்து வரும் பாலசுந்தா் மனைவி அந்தோணி அம்மாள் (60) தேடியபோது, நாற்காலிகள் அடுக்கி வைத்திருந்த இடத்தின் அருகே கிடந்த சங்கிலியை எடுத்து மண்டப நிா்வாகி அந்தோணிராஜ் மூலம் சாத்தான்குளம் டிஎஸ்பி அருளிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து உரிமையாளரிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.

அவா் அந்தோணியம்மாளை பாராட்டி, ரூ.10 ஆயிரம் பரிசளித்தாா். மேலும், சாத்தான்குளம் டிஎஸ்பி அருள், அந்தோணியம்மாளுக்கு சால்வை அணிவித்து பாராட்டினாா். அப்போது வியாபாரிகள் சங்கத் தலைவா் கண்ணன், செயலா் மதுரம் செல்வராஜ், வழக்குரைஞா் வேணுகோபால் ஆகியோா் உடனிருந்தனா்.

Tags

Next Story