சேலத்தில் கல்லூரி மாணவி மாயம்

சேலத்தில் கல்லூரி மாணவி மாயம்

பைல் படம்

கடலூர் அருகே மங்களூரை சேர்ந்த லட்சுமி தேவி கடைக்கு சென்றவர் திரும்பி வராத நிலையில், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் மங்களூர் மெயின்ரோட்டில் உள்ள பிபூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகள் லட்சுமிதேவி (வயது19). இவர் நாமக்கலில் உள்ள தனியார்கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 9-ந்தேதி பொங்கல் பண்டிகைக்கு கல்லூரி விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவியின் சித்தி மகன் தினேஷ்குமார் கல்லூரிக்கு சென்று சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கோகுல்நாதா தெருவில் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது வீட்டில் வேலை செய்யும் நபர் கலா என்பவருடன் அருகில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற லட்சுமி தேவி மாயமானார். இதையடுத்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. இது குறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமி தேவியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story