குமரி : தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவி மாயம் !

குமரி : தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவி மாயம் !

மாணவி மாயம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத சென்ற மாணவி மாயமானதால் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன் கோணத்தை அடுத்த வீரப்புலி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் மகள் ஸ்ரீதேவி (17) கீரிப்பாறை அடுத்த வாழையத்துவயல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். நேற்று வேதியியல் தேர்வு எழுத குறத்தியரை அரசு பள்ளியில் சென்டர் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக வழக்கம் போல் ஸ்ரீதேவி நேற்று காலை சுமார் 6. 45 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் பத்து முப்பது மணி அளவில் சம்மந்தப்பட்ட பள்ளிக்கூடத்தில் இருந்து மாணவி ஸ்ரீதேவியின் பெற்றோருக்கு, உங்கள் மகள் தேர்வு எழுத வரவில்லை என போன் வந்துள்ளது. இதை அறிந்து பதற்றமடைந்த பெற்றோர் உடனே ஸ்ரீ தேவியை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு சென்றார் எங்கு இருக்கிறார் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தேர்வு எழுத சென்ற மாணவியை யாராவது கடத்தினார்களா? என பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். எனவே தங்களின் மகளை விரைவில் கண்டுபிடித்து தருமாறு சுபாஷ் சந்திரபோஸ் கீரிப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி ஸ்ரீதேவியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story