காணாமல் போன ஆட்டோ டிரைவர் சடலமாக மீட்பு

காணாமல் போன ஆட்டோ டிரைவர் சடலமாக மீட்பு
சடலம்  மீட்பு
இராஜபாளையம் அருகே காணாமல் போனதாக தேடி வந்த ஆட்டோ டிரைவர் புளியங்குளம் கண்மாயில் சடலமாக மீட்கப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புளியங்குளம் கண்மாய் பகுதியில் தண்ணீரில் அழுகிய நிலையில் கை மட்டும் தண்ணிரில் தெரிந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் அதை பார்த்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் இராஜபாளையம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு யார் என்று விசாரணை செய்ததில் சோமையாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் ராவ் 53., திருமணமாகாத நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என உறவினர்கள் தேடி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது குடிபோதையில் வேறு ஏதும் பிரச்சினையால் யாரும் இவரை கண்மாயில் தள்ளி விட்டு கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மோகன்ராவ் உடலை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூர் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story