காணாமல் போன சிறுவன் பாட்டியிடம் ஒப்படைப்பு

காணாமல் போன சிறுவன் பாட்டியிடம் ஒப்படைப்பு

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை போலீசார் பாட்டியிடம் ஒப்படைத்தனர்.


உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை போலீசார் பாட்டியிடம் ஒப்படைத்தனர்.
உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் தவித்த சிறுவனை மீட்ட போலீசார் அவரது பாட்டியிடம் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம், பொன்னமராவதி அடுத்த பூலாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் தீபன், 11; இவர் 7ம் வகுப்பு தேர்வு முடிந்துவிட்டு விடுமுறைக்காக பாட்டி வீடான சங்கராபுரம் தாலுகா பரமநத்தம் பகுதியை சேர்ந்த செல்லம்மாள் வீட்டிற்கு கடந்த 25ம் தேதி வந்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை 11:00 மணியளவில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பிய தீபன், உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் சிவகுமார், சிறுவன் தீபனை பிடித்து விசாரித்து அவரது பாட்டி செல்லம்மாளிடம் ஒப்படைத்தார்.

Tags

Next Story