ராமநாதபுரம் சுவரொட்டியால் பரபரப்பு

ராமநாதபுரம் , திமுக கூட்டணி கட்சி எம்.பி .யின் சொந்த ஊரில் பயணியர் நிழற்குடையை காணவில்லை என கிராம பொதுமக்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அவத்தாண்டை ஊராட்சி குருவாடி கிராமத்தில் கட்டிய பயணியர் நிழற்குடையை காணவில்லை என அக்கிராம பொதுமக்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் சாயல்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் நிழற்குடையை காணவில்லை எனவும், கடந்த 14-09 -2023 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டுள்ளதாக அளித்த தகவலையும் மேற்கோள்காட்டி ஒட்டிய சுவரொட்டிகளால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த அபதாண்டை ஊராட்சி மன்ற தலைவராக திமுக கூட்டணி கட்சி எம்பி யின் தாயார் ரம்ஜான் பீவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story