காணாமல் போன விவசாயி உடல் கிணற்றில் மீட்பு

காணாமல் போன விவசாயி உடல் கிணற்றில் மீட்பு

 விவசாயி உடல் கிணற்றில் மீட்பு

காணாமல் போன விவசாயி மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் விசாரணை.
தியாகதுருகம் அடுத்த பழைய பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி, 53; விவசாயி. இவர், கடந்த 23ம் தேதி சூளாங்குறிச்சியில் உள்ள வங்கிக்கு செல்வதாக தனது தம்பி தேவராஜியிடம் மொபைல் போனில் கூறிவிட்டு சென்றார். வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை 8:30 மணிக்கு வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்த திருமலை என்பவரது விவசாய கிணற்றில் தண்டபாணி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது மகன் தங்கராஜ் கொடுத்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து தண்டபாணி இறந்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story