காணாமல் போன இளம்பெண் குளக்கரையில் சடலமாக மீட்பு

காணாமல் போன இளம்பெண் குளக்கரையில் சடலமாக மீட்பு

பெண் சடலம் மீட்பு 

துயரச் செய்திகள்

விராலிமலை அருகே கவரப்பட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல் மனைவி மோனிகா(24) இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாக நிலையில் இன்னும் குழந்தை இல்லை. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மோனிகா நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினார். இதுதொடர்பாக மோனிகாவின் தாய் அஞ்சம்மாள் அளித்த புகாரின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை கிராமத்தில் உள்ள தொப்பன்குளத்தில் எரிக்கப்பட்ட நிலையில் பெண் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, இறந்து கிடந்தது காணாமல்போன மோனிகா என்பது தெரிய வந்தது.

உடலை கைப்பற்றிய போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story