சேலத்தில் வாய் பேசமுடியாத பட்டதாரி பெண் மாயம்

சேலத்தில் வாய் பேசமுடியாத பட்டதாரி பெண் மாயம்

கோப்பு படம் 

சேலத்தில் வாய் பேசமுடியாத பட்டதாரி பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாத்தி. கூலித் தொழிலாளி. இவரது 2வது மகள் நந்தினி(22), வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்கு நந்தினி வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம், வீட்டிலிருந்த நந்தினியை காணவில்லை.

எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தும், அவரை கண்டு பிடிக்க முடியாததால், அழகாபுரம் காவல் நிலையத்தில் ராஜாத்தி புகார் அளித்தார். அதன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதில், தன்னுடன் படித்த மாற்றுத்திறனாளி நண்பருடன் காதல் ஏற்பட்டு, அவருடன் நந்தினி சென்றதாக தெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story