முதியவர் மாயம் - போலீசில் புகார்

முதியவர் மாயம் - போலீசில் புகார்

காவல் நிலையம் 

கிருஷ்ணராயபுரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட தனது மாமனார் காணாமல் போனது குறித்து மருமகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, உள்வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் வயது 30. இவரது மாமனார் பாஸ்கர் வயது 62. கரூர் மாவட்டம், குளித்தலை, வடசேரியை சேர்ந்தவர். கடந்த பத்து வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் அவருக்கு குணமாகவில்லை. இந்நிலையில் மருமகன் சரவணகுமார் வீட்டில் அண்மைக்காலமாக வசித்து வந்த முதியவர் பாஸ்கர், பிப்ரவரி 17ஆம் தேதி மதியம் 12 மணியளவில், இயற்கை அழைப்புக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. வழக்கமாக அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தேடிப் பார்த்தும், உறவினர்கள் வீட்டில் விசாரித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கப் பெறாததால், இதுகுறித்து தனது மாமனாரை காணவில்லை என சரவணக்குமார் மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து, மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பாஸ்கரை தேடி வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags

Next Story