காணாமல் போனவர் வனப்பகுதியில் சடலமாக மீட்பு : போலீசார் தீவிர விசாரணை

காணாமல் போனவர் வனப்பகுதியில் சடலமாக மீட்பு : போலீசார் தீவிர விசாரணை
சடலமாக மீட்கப்பட்டவர்
தேன்கனிக்கோட்டை அருகே காணாமல் போனவர் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கொடகரை வனப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக அஞ்செட்டி போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. 31 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸாரின் தீவிர விசாரணையில் வனப்பகுதியில் உயிரிழந்து அழுகிய நிலையில் கிடந்தவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பதும் பிப்ரவரி 7ஆம் தேதி தேதி இவர் காணாமல் போனதாக பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது.

சக்திவேல் எப்படி இறந்தார் இந்த பகுதிக்கு எப்படி வந்தார். அவரை யாரேனும் கடத்தி கொண்டு வந்து கொலை செய்து வனப்பகுதியில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இந்த பகுதிக்கு வந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் அஞ்செட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு உயிரிழப்புக்கான காரணங்கள் தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Tags

Next Story