பெரம்பலூரில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட எம்எல்ஏ

பெரம்பலூரில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட எம்எல்ஏ

திருமண விழாவில் எம்எல்ஏ

பெரம்பலூரில் சுப நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ கலந்துகொண்டார்

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், பெரம்பலூர் நகர் பகுதியில் பல்வேறு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

அதன்படி பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள பூமனம் திருமண மண்டபத்தில் நகராட்சி ஒப்பந்தக்காரர் கண்ணன் மகன் ஆகாஷ் நர்மதா ஆகியோர் திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார், அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கே ஜி திருமண மஹாலில் திமுக நிர்வாகி சின்னசாமி இந்திராகாந்தி ஆகியோரின் மகன் காசிதுறை - திவ்யா திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள சின்னமணி ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நடத்துனர், செல்வராஜ் - விஜயலட்சுமியின் மகள் -இந்துஜா - பாலாஜி திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் இந்நிகழ்ச்சியின் போது திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story