தேர்தல் குறித்து எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்

சோழிங்கநல்லூர் திமுக அலுவலகத்தில் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் தலைமையில் மக்களவை தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சோழிங்கநல்லூரில் உள்ள பகுதி திமுக அலுவலகத்தில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் தலைமையில் தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற கட்சி வேட்பாளருக்கு சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மத்திய பகுதியில் வீடு வீடாக சென்று கழக அரசின் திட்டங்களை பொது மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க வேண்டுமெனவும், வருகின்ற 27/03/2024 கட்சி வேட்பாளருக்கு மிக சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டுமெனவும், மேலும் நம் பகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதிகப்படியான வாக்குகள் பெற்றுத்தர வேண்டுமென பகுதி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்வில், சோழிங்கநல்லூர் மத்திய பகுதிக்குட்பட்ட பகுதி துணை செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள்,மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரு‌ம் உடனிருந்தனர்.

Tags

Next Story