விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு எம்எல்ஏ ஆறுதல்

விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு எம்எல்ஏ ஆறுதல்
விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு எம்எல்ஏ ஆறுதல்
தென்காசி மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எம்எல்ஏ நேரில் ஆறுதல் கூறினார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே புளியங்குடியை சேர்ந்த 6 பேர் குற்றாலம் சென்று விட்டு வரும் வழியில் இன்று 28ம் தேதி காலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர், இதனை அறிந்த வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைகுமார் விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மதிமுக துணை பொதுசெயலாளர் தி.மு. இராஜேந்திரன் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்ரமணியன், மாநில மாணவர் அணி துணை செயலாளர் பால குமார், நகரச்செயலாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story