பஜ்ஜி போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்எல்ஏ

காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து, மதுராந்தகம் எம்எல்ஏ, மரகதம் குமரவேல் டீகடையில் பஜ்ஜி போட்டு வாக்கு சேகரித்தார்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தனி தொகுதிக்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி சார்பாக, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த நெல்வாய் கூட்ரோடு பகுதிகளில் தெரு வீதி வீதியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்ட உதவிகள், மற்றும் திமுகவின் பொய் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் வாக்கு சேகரித்தார்.

அப்போது இதில்,மதுராந்தகம் வடக்கு ஒன்றிய பஜ்ஜி கடையில் பஜ்ஜி போட்டு எம் எல் ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செயலாளர் V.G.குமரன், மாவட்ட மாணவரணி செயலாளர் T.G.தணிகைவேல் உட்பட பலர் பங்கேற்றனர்..

Tags

Next Story