தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எம்எல்ஏ நிதி உதவி

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எம்எல்ஏ நிதி உதவி

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எம்எல்ஏ நிதி உதவி

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எம்எல்ஏ அசோக்குமார் நிதி உதவி வழங்கினார்
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை கடைவீதியில் வசித்து வருபவர் வி.கே.நீலகண்டன் - நீலா தம்பதியினர். இவர்கள் அப்பகுதியில் பள்ளிவாசல் அருகே வீட்டின் முன்புறம் தேநீர்க்கடை வைத்துள்ளனர். மேலும் அங்கேயே தங்கள் குழந்தைகளுடன் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு நள்ளிரவு திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது. இதில் வீட்டிலிருந்து வீட்டு உபயோக பொருட்கள் குடிசை அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. தகவல் அறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் தீ விபத்து குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறி ரொக்கப் பணம் நிவாரண உதவியாக வழங்கினார். அப்போது சேதுபாவாசத்திரம் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன் மற்றும் கிராமத்தினர் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story