மின்சாரம் தாக்கி உயிரிழந்தவருக்கு எம்.எல்.ஏ நிதி உதவி

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவருக்கு எம்.எல்.ஏ நிதி உதவி

எம்.எல்.ஏ நிதி உதவி 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் குப்பன் என்பவரின் மனைவி சரசு மழை நேரத்தில் மின் கம்பி அறுந்ததை தெரியாமல் அதன் மீது கால் வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தாரை பெ.சு.தி.சரவணன், எம்எல்ஏ சந்தித்து சரசு குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

அப்போது ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர் கி.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.எஸ்.லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, தாசில்தார் முருகன் ,தனி தாசில்தார் ரேணுகா, மாவட்ட பிரதிநிதி சுதாகர், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story