அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய எம்எல்ஏ

மதுராந்தகம் மற்றும் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய எம்எல்ஏ.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் மற்றும் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அதிமுக ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகளை, சந்தித்து சால்வை அணிவிக்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் கலந்துகொண்டு ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார். இதனை அடுத்து மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று முதுகரையில் அலங்கரிக்கப்பட்டு இருந்த புரட்சித்தலைவி அம்மா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இவர்கள் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியை மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முதுகரை கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்றது. அப்போது வேட்பாளர் பேசுகையில் இந்த விடிய திமுக ஆட்சியில் கஞ்சா அபின் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது இதை கண்டு கொள்ளாத திமுக அரசு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story