பாகநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலை கடையை திறந்து வைத்தார் எம் எல் ஏ.

பாகநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலை கடையை திறந்து வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பாகநத்தம் ஊராட்சியில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், அமைக்கப்பட்ட புதிய நியாய விலை கடையை இன்று கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்தார். மேலும், அப்பகுதி பொது மக்களுக்கு நியாயவிலைக் கடையில் வழங்கப்பட்ட அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி வேலுச்சாமி, பாகனத்தம் ஊராட்சிமன்ற தலைவர் குப்புசாமி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்கள், தகவல் உரிமைச் சட்ட பிரிவு சுப்பிரமணி, பாகனத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நியாய விலை கடை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story