புதிய அங்கன்வாடி மையத்தை திறந்த எம்எல்ஏ

புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-147, ஆலப்பாக்கம், கங்கையம்மன் கோயில் தெருவில் நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், மாமன்ற உறுப்பினர் ரமணி மாதவன், திமுக வட்ட செயலாளர் மாதவன், திமுக மாவட்ட பிரதிநிதிகள் பிருந்தாவனம், சதீஷ், சமூக சேவகர் டில்லிபாபு, ஆனந்தன், உதயம்வேணு, ஆனந்தகுமார், குப்புசாமி, முருகன் மற்றும் பொது நலச் சங்க நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story