நியாய விலை கடையை திறந்து வைத்த எம்எல்ஏ

கடவூர் அருகே செங்காட்டுபட்டியில் பகுதி நேர நியாய விலைக் கடையை எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தார்
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, கடவூர் ஊராட்சியில் உள்ள செங்காட்டுபட்டியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில், பகுதிநேர புதிய நியாய விலை கடையை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி இன்று திறந்து வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், தரகம்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் சௌந்தரவள்ளி, மாவட்ட கூட்டுறவு அலுவலர் ஆறுமுகம், பாலவிடுதி கூட்டுறவு சங்க செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்,ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story