கந்திலி அருகே அங்கன்வாடி புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் !

கந்திலி அருகே அங்கன்வாடி புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் !

அங்கன்வாடி

கந்திலி அருகே அங்கன்வாடி புதிய கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே அங்கன்வாடி புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி தெற்கு ஒன்றியம், மண்டலநாயனகுண்டா புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் மற்றும் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடைபெறாது திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். அதனைதொடர்ந்து மண்டலநாயனகுண்டா அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் துரைசாமி, நடராஜன், ஊராட்சிமன்ற தலைவர் (பொ) அசோகன், ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தன், ஊராட்சிமன்ற து.தலைவர் (பொ) ரம்யாசுரேஷ்குமார், மாவட்ட அணிகளின் து.அமைப்பாளர்கள் இந்துமதி, அன்புரோஸ், ராஜா, பத்ரு, வெங்கடேசன், விக்னேஷ் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story