பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த எம்.எல்.ஏ

காவேரிப்பட்டிணம் அருகே புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை எம்எல்ஏ மதியழகன் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஒன்றியம், தட்ரஅள்ளி ஊராட்சி ஒட்டப்பட்டி கிராமத்தில் திமுக கட்சியின் கொடியேற்றும் விழா மற்றும் புதியதாக கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலந்து கொண்டு மக்களின் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார். உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத் தோழர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story