பள்ளி கட்டிடங்களை எம்எல்ஏ திறந்து வைப்பு

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் அரசு பள்ளி கட்டிடங்களை எம்எல்ஏ திறந்து வைத்தார்.
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் கழிப்பறை வசதி இல்லாத அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டித் தர வேண்டும் என்ற எனது தொடர் முயற்சியின் கோரிக்கையை ஏற்று L&T நிறுவனம் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-147, ஆலப்பாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளி, வார்டு-151, பூத்தப்பேடு சென்னை மாநகராட்சி நடு நிலைப் பள்ளி, வார்டு-150, செட்டியார் அகரம், சென்னை மாநகராட்சி நடு நிலைப் பள்ளி, வார்டு-144, மதுரவாயல் அரசு மேல் நிலைப் பள்ளி, வானகரம் ஊராட்சி, மேட்டுக்குப்பம் அரசு உயர் நிலைப் பள்ளிகளுக்கு ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட கழிப்பறைகளை இன்று மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், மாமன்ற உறுப்பினர்கள் ரமணி மாதவன், ச.சங்கர்கணேஷ்., வட்ட கழக செயலாளர்கள் மாதவன், அ.மோசஸ், மாவட்ட பிரதிநிதிகள் க.பிருந்தாவனம், குப்புசாமி, விஜயன், சேகர் மற்றும் கழக நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story