வெள்ளக்கோவில் பகுதியில் சேதமடைந்த பாலத்தை ஆய்வு செய்த எம்எல்ஏ

வெள்ளக்கோவில் பகுதியில் சேதமடைந்த பாலத்தை ஆய்வு செய்த எம்எல்ஏ

பாலத்தை ஆய்வு செய்த எம்எல்ஏ

வெள்ளக்கோவில் பகுதியில் சேதமடைந்த பாலத்தை எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17,18 ஆம் தேதிகளில் பெய்த மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அந்த வகையில் வெள்ளக்கோவில் பகுதியில் சிறுபாலம் சேதமடைந்தது.இந்த நிலையில், சேதமான பாலத்தை பாளையங்கோட்டை எம்எல்ஏ மு.அப்துல் வஹாப் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, பாலத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடம் உறுதியளித்தார். இந்த ஆய்வின் பொழுது மாநகராட்சி துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story