பண்ருட்டி தீயணைப்பு நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

பண்ருட்டி தீயணைப்பு நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

எம்எல்ஏ ஆய்வு

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக் ஜாம் புயலையடுத்து பல்வேறு மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பண்ருட்டியில் இயங்கிவரும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆயத்தப் பணிகள் மற்றும் தயாராக உள்ள உபகரணங்களை பார்வையிட்டு குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story