திருப்பூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை எம்எல்ஏ ஆய்வு

திருப்பூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை எம்எல்ஏ ஆய்வு

முகாமை ஆய்வு செய்யும் எம்எல்ஏ

திருப்பூரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -2 வார்டு -16,17 மற்றும் மண்டலம்-3 வார்டு-46,47,48ல்நடைபெற்று வரும் "மக்களுடன் முதல்வர்" திட்ட சிறப்பு முகாம்களை, வடக்கு மாவட்ட செயலாளர்,தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், வடக்கு மாநகர செயலாளர்,மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்திகழ்ச்சியில் துணை மேயர் ஆர் பாலசுப்ரமணியம் அவர்களும்,தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு‌‌‌நாகராசன் ,பகுதி கழகச் செயலாளர் ஜோதி, போலார் சம்பத், மேங்கோ பழனிச்சாமி, உசேன் ,மண்டல தலைவர் கோவிந்தராஜ், கோவிந்தசாமி, வட்ட கழக செயலாளர்கள் மயில்சாமி, ஜானகிராமன், வெங்கட் ராஜ், ஆறுமுகம்,பத்ரன் ,மாமன்ற உறுப்பினர் ஜெயசுதா பூபதி, விஜயலட்சுமி கோபால்சாமி மற்றும் மாவட்ட மாநகர பகுதி வட்ட கழக நிர்வாகிகளும்,சார்பு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story