மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - எம்எல்ஏ ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - எம்எல்ஏ ஆய்வு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை ஆய்வு செய்து எம்எல்ஏ
செங்கல்பட்டு மாவட்டம், பனையூரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லூர் தாலுக்கா,வார்டு எண் 197 பனையூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று பொது மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணுகின்ற வகையில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுவதை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் நேரில் சென்று பார்வையிட்டு பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இந்நிகழ்வில்,சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழக செயலாளரும்,15 வது மண்டல குழு தலைவர் V.E மதியழகன்,மண்டலம் 15 உதவி ஆணையர் உள்ளிட்ட மாநகராட்சி அரசு அதிகாரிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் த.பஷீர்,வட்ட செயலாளர் T.ராஜேந்திரன், பொது மக்கள், பயனாளிகள் அனைவரும் உடனிருந்தனர்.

Tags

Next Story