கோவையில் முப்பெரும் விழாவிற்கு எம்,எல்,ஏ அழைப்பு

கோவையில் முப்பெரும் விழாவிற்கு எம்,எல்,ஏ  அழைப்பு

கோவையில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் பங்கேற்க திமுக எம்எல்ஏ அழைப்பு விடுத்துள்ளார்.


கோவையில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் பங்கேற்க திமுக எம்எல்ஏ அழைப்பு விடுத்துள்ளார்.

கோவை கொடிசியா மைதானத்தில் ஜூன்15ஆம் தேதி மாலை 4 மணி அளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா,மக்களவைத் தோ்தல் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் விழா, திராவிட மாடல் முதல்வருக்கு பாராட்டு விழா என ‘முப்பெரும் விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட திமுகவினா் திரளாக கலந்துகொள்ள வேண்டும். மேலும், திமுகவின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூா், வாா்டு, கிளைச் செயலா்கள், நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்திரளாகப் பங்கேற்க வேண்டும் எனதென்காசி திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளாா்.

Tags

Next Story