ஆத்தூரில் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ

ஆத்தூரில் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ

ஆறுதல் தெரிவித்த எம்எல்ஏ

ஆத்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து எம்எல்ஏ ஆறுதல் தெரிவித்தார்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வால்கரடு பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளிக்கு பல்வேறு பகுதியிலிருந்து மாணவ மாணவிகள் பயின்று ஒரு நிலையில் இன்று காலை வளையமாதேவி பகுதியில் இருந்து 40 க்கும் குழந்தைகளை பள்ளி பேருந்தில் ஏற்றிக்கொண்டு வளையமாதேவி வழியாக பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது,

எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 மாணவ மாணவிகள் மூன்று ஆசிரியர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்,

மேலும் அவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் நேரில் சந்தித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்

Tags

Next Story