காந்தி சிலைக்கு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

காந்தி சிலைக்கு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

மகாத்மா காந்தி நினைவு நாள் 

காந்தி போட்டால் பகுதியில் காந்தி சிலைக்கு மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஜனவரி 30 மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு காந்தி போட்டால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .இதனை தொடர்ந்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக காந்தி பொட்டலில் நடைபெற்ற சமூக நல்லிணக்க உறுமொழி ஏற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் துணைமேயர் தி.நாகநாஜன், அருட்தந்தையர்கள் மரியநாதன், லாரன்ஸ், பால்பிரிட்டோ, மதுரை மாவட்ட முஸ்லீம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி, மதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.முனியசாமி, பகுதி செயலாளர்கள் கோவிந்தன், போஸ், மாநில தொண்டரணி துணை செயலாளர் பச்சமுத்து, வட்ட செயலாளர்கள் பாண்டி, மாயழகு, தொண்டரணி அமைப்பாளர் அமிர்தராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் புலிசேகர், சிறுபான்மை மக்கள் நலக்குழு கணேசமூர்த்தி, ஜான்சன், போனிபேஸ் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர்.

Tags

Next Story