அஞ்சூரில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ

அஞ்சூரில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ
பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ
அஞ்சூரில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகளை எம்எல்ஏ வழங்கினார்.

செங்கல்பட்டுமாவட்டம்,காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அஞ்சூர் கிராமத்தில் இயங்கி வரும் மாதிரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில்,தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி வருசோதனன் கலந்து கொண்டு 49 மாணவர்கள் மற்றும் 58 மாணவிகள் என மொத்தம் 107 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் ,பள்ளி தலைமை ஆசிரியர் ,வார்டு உறுப்பினர்கள்,பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்,மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்..

Tags

Next Story