கல்லூரி மாணவர்களுக்கு உறுதியளித்த எம்எல்ஏ

கல்லூரி மாணவர்களுக்கு உறுதியளித்த எம்எல்ஏ
எம்எல்ஏ
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தனியார் கல்லூரியில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக மாண்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இந்த கல்லூரியில் மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நேற்று (மே 16) பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவை சந்தித்து புகார் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ இசக்கி சுப்பையா மாணவர்களுக்கு உறுதியளித்தார்.

Tags

Next Story