மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் எம்எல்ஏ ராஜா மனு

மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் எம்எல்ஏ ராஜா  மனு

மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் அளித்த சட்டமன்ற உறுப்பினர் ராஜா மனு அளித்தார்.


மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் அளித்த சட்டமன்ற உறுப்பினர் ராஜா மனு அளித்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரம் திருப்பூர் குமரன் நகர் ரயில்வே பாதை அருகில் உள்ள தெருக்களில் சாலை அமைப்பதற்கான தடையில்லா சான்று பெற மதுரை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் செல்வம் அவர்களை திமுக தென்காசி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். உடன் சங்கரன்கோவில் நகராட்சி ஆணையர் சபாநாயகம், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன், 1வது வார்டு கவுன்சிலர் புஷ்பா ஆகியோர் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story