மறியலில் கைதான காங்கிரஸ் கட்சியினருடன் எம்எல்ஏ சந்திப்பு

மறியலில் கைதான காங்கிரஸ் கட்சியினருடன் எம்எல்ஏ சந்திப்பு

காங்கிரஸ் கட்சியினருடன் எம்எல்ஏ சந்திப்பு

குழித்துறையில் நடைபெற்ற சாலை மறியலில் கைதான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை எம்.எல்.ஏ ராஜேஷ் குமார் சந்தித்து பேசினார்.
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் உடனே விடுதலை செய்ய வேண்டும்,மீனவர்கள் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்தும், பிரதமர் மோடி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருப்பு கொடி ஏந்தி தமிழ்நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குழித்துறை,மணவாளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குழித்துறையில் மேற்கு மாவட்ட தலைவர் பினு லால் சிங் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு கையில் கருப்பு கொடியேத்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மறியலிலும் ஈடுபட்டனர்.இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் நேரில் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்.

Tags

Next Story