ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

மதுரவாயலில் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் எம்எல்ஏ மனுக்கள் பெற்றுக்கொண்டார்.
சென்னை மாவட்டம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, மதுரவாயல் வட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் தென் சென்னை வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் பாபு தலைமையில் இன்று நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், எம்.சி., பகுதி துணை செயலாளர் தீ.பாலாஜி, மாமன்ற உறுப்பினர்கள் M.E.ஸ்டாலின், எம்.சி., திலகர், எம்.சி.,திமுக வட்ட செயலாளர்கள் S.G.மாதவன், M.M.ஜெயரத்தினம், M.ரூபன் மற்றும் கழக நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story