மழையால் பாதிப்பு - நிவாரணம் வழங்க கோரிக்கை

மழையால் பாதிப்பு - நிவாரணம் வழங்க கோரிக்கை

நிவாரணம் வழங்க கோரிக்கை 

மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்க வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனு அளித்தார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ஈ.ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரனிடம் அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அண்மையில் பெய்த பெருமழை காரணமாக நெற்பயிா்கள், புஞ்சை நிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த மானாவரி பயிா்கள் சேதமாகி, விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், ஏராளமான கால்நடைகள் இறந்துள்ளன. தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags

Next Story