புதிய நியாய விலைக் கடை திறப்பு !

புதிய நியாய விலைக் கடை திறப்பு !

எம்எல்ஏ சிவகாமசுந்தரி

புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்து பொருட்களை வழங்கினார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்து பொருட்களை வழங்கினார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள, கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில், கரூர் மாவட்ட கூட்டுறவு துறையின், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையை மக்கள் பயன்பாட்டுக்கு இன்று திறந்து வைத்தார் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. மேலும், புதிய கடையில் குத்து விளக்கு ஏற்றி வைத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நியாய விலை கடையில் வழங்கப்படும் தமிழக அரசின் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் பேரூர் கழக செயலாளர் சசிகுமார், பொது விநியோக துணை பதிவாளர் அருண்மொழி, கூட்டுறவு சங்க செயலாளர் செல்வராணி, செயல் அலுவலர் யுவராணி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நியாய விலை கடை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story