புதிய பொது கழிப்பிடம் கட்டிடத்தைத் திறந்து வைத்த எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

கிருஷ்ணராயபுரத்தில் புதிய கழிப்பிடத்தை எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட நாலாவது வார்டு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 2022-23 திட்டத்தின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் தனித்தனி கழிப்பிட கட்டிடத்தை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உள்ளாட்சித் தேர்தலின் போது கழிப்பிடம் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் ரூபாய் 15 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டிய இரண்டு கழிப்பிடத்தையும் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி தலைவர் சேதுமணி மகாலிங்கம், துணைத் தலைவர் வளர்மதி, கிருஷ்ணராஜபுரம் நகர செயலாளர்கள் சசிகுமார், மோகன்ராஜ், கிருஷ்ணாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, செயல் அலுவலர் யுவராணி, 4-வதுவார்டு உறுப்பினர் ராதிகா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story