புதிய நாடக மேடையை திறப்பு - குத்து விளக்கு ஏற்றி வைத்த எம் எல் ஏ

கரூரில் புதிய நாடக மேடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்த எம் எல் ஏ சிவகாமசுந்தரி.
கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உப்பிடமங்கலம் பேரூராட்சியில் உள்ள பழைய கஞ்சமனூர் பகுதியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 -24ல் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில், நாடக மேடை அமைக்கும் பணி நடைபெற்று முடிவற்றது. இன்று அந்த நாடக மேடையை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், உப்பிடமங்கலம் பேரூர் கழக செயலாளர் தங்கராஜ், உப்பிடமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நாடக மேடை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story