வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்த எம்.எல்.ஏ

ஜெயங்கொண்ட சோழபுரத்தில் ரூ.58 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில், ஆழ்குழாய் கிணறு அமைத்து மினி பவர் பம்பு பொருத்துதல், மயான எரிமேடை அமைத்தல்,மழை நீர் வடிகால் அமைத்தல், பூங்கா மேம்பாடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் ஜெய கொண்ட சோழபுரம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்றது. பூமி பூஜை முடிந்த பிறகு அதற்கான பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ் பேரூராட்சி தலைவர் செளந்தரா பிரியா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story